பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 14,966 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (06) நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, இன்று காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 86 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
from tkn