ஊரடங்கை மீறி கைதானோர் 12,223ஆக அதிகரிப்பு

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 12,223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,017 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20ஆம் திகதி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியினுள்ளே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. 

இதற்கமைய நேற்று (03) காலை 6.00 மணி முதல் இன்று(04) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள் 1,493 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 360 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

Sat, 04/04/2020 - 08:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை