மி.லீ. 12,000 கசிப்பு, கோடா அதிரடிப் படையால் மீட்பு

12,000 மில்லி லீற்றர் கசிப்பு, 1105000 மில்லி லீற்றர் கோடா என்பவற்றை வவுணதீவு விசேட அதிரடிப் படையினர் கைப்பறிறியுள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து கொக்கட்டிச்சோலை நடிஞ்சேனை பாலத்தினுள் ஆறு பரள்களில் நீருக்கடியில் மறைத்து வைத்திருந்த நிலையில் இப்போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

 

 

Mon, 04/20/2020 - 08:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை