ஊரடங்கை மீறிய 1,107 பேர் 24 மணி நேரத்தில் கைது

பொலிஸ் ஊடரங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நேற்று (06) காலை 6.00 மணி முதல் இன்று (07) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள் 1,107 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 326 வாகனங்கள் கைப்பற்றப்பபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 15,902 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,991 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Tue, 04/07/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை