ஊரடங்கை மீறி கைதானோர் 11,000 ஐ தாண்டியது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2,727 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து இன்று (03) நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியினுள்ளே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இன்று காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Fri, 04/03/2020 - 17:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை