பூசா கடற்படைத் தளத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில், தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 09 பேர் இன்று (13) தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொவிட்-19 நோய் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு, அது தொடர்பில் அங்கீகரிக்கும் தனிமைப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 57 பேர் பூசா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இன்றுவரை வெளியேறியுள்ளனர்.
மேலும் 32 இலங்கையர்கள், தற்போது இந்த தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
from tkn