இன்று (30) கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரால் மக்கள் அதிகமாக நடமாட்டும் பகுதிகளில் தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொலிஸ் மா அதிபரின் வழிநடத்தலில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், கிளிநொச்சி புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளிலும் தொற்று நீக்கல் நடவடிக்கை இடம்பெற்றது.
(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்ச்செல்வன்)
Mon, 03/30/2020 - 13:48
from tkn