நான்கு போலந்து பிரஜைகள் IDH வைத்தியசாலைக்கு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் போலந்து பிரஜைகள் நால்வர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (14) காலை ரஷ்யாவிற்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய்த் தொற்றுக்கு உள்ளான அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டதினால், ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 04 பேரும் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு கடந்த மாதம் 26ஆம் திகதி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 03/14/2020 - 10:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை