அல்-அமீன் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் போட்டி

வவுனியா, பாவற்குளம் அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜனாப் எஸ். புகாரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்றன.

இதன்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி ஆர்வத்துடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றியதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டது. இதில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன், பதவியா பிரதேச செயலாளர் றழியுத்தீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் பரணிதரன், அயல் பாடசாலை அதிபர்கள், உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவகர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா விசேட நிருபர்

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை