வீதியை விட்டு முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் படைவீரர் காயம்

மூதூர் பச்சநூர் வாய்க்காலில் முச்சக்கர வண்டி தடம்புரண்டு குடை சாய்ந்ததில் முச்சக்கர வண்டியில் பயணித்த கடற்படை வீரரொருவர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்ற இவ் விபத்தில் சேருநுவர பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார( 35) எனும் கடற்படைை வீரரே காயமடைந்துள்ளார்.

கடற்படை வீரர் சேருநுவர பகுதியிலிருந்து மூதூர் நோக்கி முச்சக்கர வண்டியில் பயணம் செய்த போதே முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகி வாய்க்காலில் தடம்புரண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடத்தில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வாய்க்காலில் விழுவதனால் வீதிக்கும் வாய்க்காலிற்கும் இடையில் பாதுகாப்பு வேலி அமைக்குமாறு சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தோப்பூர் குறூப் நிருபர்

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை