கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான செப்பல் ஹெட்லி ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த 2 போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதனால் நியூஸிலாந்து வீரர்கள் அவசரமாகத் தாயகம் திரும்புகின்றனர்
இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் சபை விடுத்த அறிவிப்பில், “அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மீதமுள்ள இரு போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. அந்த போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 71 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
from tkn