மறு அறிவித்தல் வரை தனியார் மருந்தகங்களை மூட பணிப்பு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க மருந்தகங்களை தவிர, ஏனைய அனைத்து மருந்தகங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன இன்று  (27) பணித்துள்ளார்.  
 
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் மருந்துகளை வீடுகளுக்கு சென்று  விநியோகிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிப்பது தொடர்பில்; சில பல்பொருள் அங்காடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, இப்பல்பொருள் அங்காடிகள் பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய திறந்து வைக்கப்படுமாயின் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    
 
Fri, 03/27/2020 - 16:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை