மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி பாலமுனை யங்ஸ்டார் அணி வெற்றி

பாலமுனை வை.எம்.எம்.ஏ.கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஸ்தாபக தலைவர் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் ஞாபகார்த்த மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதி நாள் நிகழ்வு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

பாலமுனை வை.எம்.எம்.ஏ கிளையின் விளையாட்டுக் குழுத் தலைவர் ஆசிரியர் ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வை.எம்.எம்.ஏ.கிளையின் ஆலோசகர் பாலமுனை பாறூக் பிரதம அதிதியாகவும், பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல்.அலியார், தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பாளர் ஏ.கே.றுமைஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதி சுற்றுப் போட்டிக்கு பாலமுனை றைஸ்டார் ஹோப் அணியும், பாலமுனை யங்ஸ்டார் அணியினரும் தெரிவாகினர். இதில் பாலமுனை யங்ஸ்டார் அணி வெற்றிபெற்று 2020 வருடத்திற்கான சம்பியனாக தெரிவாகி கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை