பேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள், நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கான மருந்துக்களை வழங்கும் நடவடிக்கை இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் தொடர்ந்து மூன்று நாட்களாக இருக்கின்ற இவ்வேளையில், மன்னார், பேசாலை பிரதேச வைத்தியசாலையில் மாதந்தோறும் கிளினிக் செல்லும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
(தலைமன்னார் நிருபர் - வாஸ் கூஞ்ஞ)
Sat, 03/28/2020 - 17:35
from tkn