பிள்ளையானுக்கு தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி

19 ஆம் திகதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய மட்டு. சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நேற்று வியாழக்கிழமை (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25 திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரு மான சந்திரகாந்தன் உட்பட 5 பேர் சந்தேகத்தில் 2015-.10-.11ஆம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியை கோரியிருந்தார் இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் இந்த மனுவை பரீசிலனைக்கு எடுத்தார்.எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று 12 திகதியில் இருந்து 19 திகதி வரையிலான காலத்திற்குள் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.எனவே வேட்பு மனு தாக்கலை சிறைச்சாலையில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகர் கட்டளை பிறப்பித்துள்ளார்.

 

 

 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை