தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்களின் இருப்பு முக்கியம்

தீர்வு வரும் வரையில் தமிழரின் இருப்பு முக்கியமானதெ ன்றும் மக்களின் இருப்புத் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தென்மராட்சிப் பகுதியில் (11) நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தருவார்களென நீங்கள் நம்புகிறீர்களா? " என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்: தமிழ் மக்களுக்கான தீர்வு இன்று வரும், நாளை வரும், அடுத்த பொங்கலுக்கு வரும் என்று காத்திருந்தோம். எப்போது தீர்வு வரும் என்று தெரியவில்லை. பெற்றுத்தருவார்களா ? என்றும் தெரியவில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு வரும் வரை காத்திருக்கத் தயார். ஆனால் தீர்வு வரும் வரை எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வது முக்கியம்.

தமிழரின் இருப்பு இருந்தாலே,தீர்வை அனுபவிக்க முடியும்.

சரசாலை நிருபர்

 

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை