வலய மட்ட பெண்கள் கிரிக்கெட்டில் வடமராட்சி மகளிர் அணி சம்பியன்

வலயமட்ட பெண்கள் துடுப்பாட்டத்தில் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியை வீழ்த்தி சாம்பியனானது கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி.

2020 ஆம் ஆண்டுக்கான வடமராட்சி வலயமட்ட பெண்கள் கிரிக்கெட் இறுதியாட்டம் கரணவாய் கொலின்ஸ் மைதானத்தில் விளையாட்டுக் கழகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற விக்னேஸ்வரா கல்லூரி அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி சார்பில் அதிகபட்சமாக விசாலினி 10 ஓட்டங்களையும், காவியா 7 ஓட்டங்களையும் பெற்று 47 ஓட்டங்களை சேகரித்து கொண்டனர். விக்னேஸ்வரா கல்லூரி சார்பில் மிக்சனா 3 விக்கெட்டுக்களையும், மது சியாசாமினா தர்ஷிகா 3 விக்கெட்டுக்களையும், சாமானா மதிய தர்சிகா தலா ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

48 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய விக்னேஸ்வரா கல்லூரி இரண்டு பந்துப் பரிமாற்றங்கள் மீதம் இருக்கையில் இலக்கு இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று வடமராட்சி வலயமட்ட சம்பியனானது.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் சாதுரிய 30 ஓட்டங்களையும், நிருத்திக் 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.

நெல்லியடி மேலதிக நிருபர்

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை