மதுப் பிரியர்களின் கூடாரமான சந்தைக் கட்டடம்

மருதங்கேணியில் நன்னீர் மீன்பிடி சந்தைக்காக அமைக்கப்பட்ட கட்டடம் வௌவால்களின் இருப்பிடமாகவும், மது பிரியர்களின் மறைவிடமாகவும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடாரப்பு புன்னையடிப் பகுதியில் இச் சந்தைக்கான கட்டடம் பிரதேச செயலகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

அப் பகுதியில் உள்ள நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவோரின் கோரிக்கைக்கு அமைவாக புன்னையடிப் பகுதியில் நன்னீர் மீன்பிடி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டு சில மாதத்துக்குள் அதன் கதவுகள் விசமிகளால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த கட்டடம் தற்போது பயன்படுத்தப்படாத நிலையில் வௌவால்களின் இருப்பிடமாகவும், மதுப்பிரியர்களின் மறைவிடமாகவும் காணப்படுகிறது. எனவே நன்னீர் மீன்பிடி சந்தைக்காக அமைக்கப்பட்ட இக் கட்டடத்தை பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டனர்.

நாகர்கோவில் நிருபர்

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை