- களுத்துறையில் அட்டுலுகம; கண்டியில் அக்குரணை முற்றுமுழுதாக மூடப்பட்டது
- புத்தளம் கடையன்குளத்தின் ஒரு பகுதி மக்கள் தனிமைப்படுத்தலில்
புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை, மார்ச் 30 திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன.
எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிய நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புத்தளத்தின் கடையன்குளத்தின் ஒரு பகுதியில் உள்ள் பிரதேசங்களில் வாழ்வோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
from tkn