இன்றைய நிலைமையில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் இலட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரும் சுகாதார ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டி வரும். ஆகவே தேர்தலை பின்போட்டு விட்டு, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, தமிழ் முற்போக்கு கூட்டனி கோருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி தனது டுவிட்டர் தளத்திலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி வைத்து விட்டு, உடனடியாக தேர்தலை பின் போட்டு, கொரோனா கொடுமையிலிருந்து நாட்டை காக்க, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று சிந்திக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாம் கோருகிறோம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
from tkn