இந்திய கடலில் மேலும் மூன்று படகுகள் மீட்பு

கச்சதீவு திருவிழாவின்போது காணாமற்போன இலங்கை படகுகளில் மேலும் மூன்று படகுகள் இந்தியாவில் மீட்கப்பட்டுள்ளன.

புத்தளம் பகுதி பதிவிலுள்ள படகொன்று கடலில் மூழ்கியிருந்த நிலையில், இந்திய கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோணியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு சென்ற யாத்திரிகளது படகுகள் சில காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் ஏழு படகுகள் இந்திய கடல் எல்லையில் கரையொதுங்கிய நிலையில் அவற்றை கடலோர காவற்படை மீட்டு இலங்கையிடம் ஒப்படைத்தது. இந்நிலையில் தற்போது மேலும் மூன்று படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவற்றில் ஒரு படகு புத்தளம் மாவட்ட பதிவுடன் காணப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மீட்கப்பட்ட மூன்று படகுகளை இலங்கைக்கு கொண்டுவர யாழ்.மீனவ அமைப்புக்கள யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கந்தர்மடம் நிருபர்

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை