பொதுத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றம் கூட்டப்படமாட்டாது

கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி விவாதிக்க பாராளுமன்றம் கூட்டப்பட மாட்டாது. பொதுத் தேர்தலுக்கு பின்னரே பாராளுமன்றம் கூட்டப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.    

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது. அபிவிருத்தியடைந்த பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் செயற்பட்டுள்ளது.   

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுகாதாரத்துறை சர்ச்சையை எதிர்க்கட்சியினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எடுத்துவரும் முயற்சிகள் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.(ஸ)     

Tue, 03/17/2020 - 10:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை