காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாப்பரசர் பிரான்சிஸுக்கு கொரோன வைரஸ் தொற்று இல்லை என்பது மருத்துவ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாக இத்தாலி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மசக்ரோ என்ற பத்திரிகை வெளியிட்டிருக்கும் அந்த செய்தி தொடர்பில் வத்திக்கான் பேச்சாளர் மட்டியோ ப்ருனி எந்த பதிலும் அளிக்கவில்லை.
பாப்பரசர் சுகவீனம் காரணமாக கடந்த வாரம் பொது நிகழ்ச்சிகளை குறைத்துக்கொண்டதோடு தாம் பாப்பரசர் அந்தஸ்த்தை பெற்ற பின் முதல்முறை வார இறுதி ஆராதனையை ரத்துச் செய்தார். 83 வயதான பாப்பரசர் இருமுவது மற்றும் மூக்கை துடைப்பதை காண முடிந்தது. எனினும் அவருக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சல்தான் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இன்னும் சில நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளை அவர் தவிர்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
from tkn