கல்முனையில் ஏ.வி.எல் கிரிக்ெகட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

கல்முனை துளிர் விளையாட்டுக்கழகத்தின் ஏழாவது வருட ஏ.வி.எல் ஞாபகார்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கான அங்குராப்பண நிகழ்வு துளிர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.றோகனகாந்தன் தலைமையில் கல்முனை உவெஸ்லி கல்லூரி வளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை உப பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் கே.பிரபாகரன், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் முதல்வர் எஸ்.கலையரசன், ஓய்வு நிலை அதிபர் வி.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ் கிரிக்கட் சுற்றுப்போட்டியானது ஒரு மாதகாலத்திற்கு நடைபெறவுள்ளது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்டுள்ள 32 விளையாட்டுக் கழகங்கள் மோதிக்கொள்ளவுள்ளன. ஆரம்ப நிகழ்வில் கல்முனை வாரணம் விளையாட்டுக்கழகமும், கல்முனை காமலியன்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை