இத்தாலியில் வசித்துவரும் குடும்பத்தினர் பருத்தித்துறை சுப்பர் மடத்தில் உள்ள தமது உறவினர்கள் வீட்டிற்கு வந்த நிலையில் அங்கு பொலிஸாரும் சுகாதார உத்தியோகத்தர்களும் விசாரணையை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
கொரோனோ நோய்த் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்து வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அத்தோடு வெளிநாடுகளில் இருந்த வருபவருக்கே இந் நோயின் தாக்கம் அதிகளவில் இணங்காணப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பருத்திதுறையிலுள்ள வீடொன்றிற்கு அவர்களின் உறவினர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ளனர். ஆயினும் அவர்களுக்கு கொரோனா தாக்கம் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து பொலிஸாருக்கும் இரகசிய தகவல் வழங்கியுள்ளனர்.
பருத்தித்துறை விசேட நிருபர்
from tkn