வெள்ளிப் பதக்கம் பெற்ற பெண்ணுக்கு சைக்கிள் பரிசு

தேசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்ற முல்லைத்தீவு குடும்ப பெண்ணுக்கு பிரித்தானியாவில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரெத்தினம் திருக்குமார் தனிப்பட்ட 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா அன்பளிப்பு செய்துள்ளார்.

முள்ளியவளையைச் சேர்ந்த நந்தீஸ்வரன் ராதிகா 2019ஆம் ஆண்டு 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சைக்கிலோட்ட போட்டியின் 2ஆம் இடம்பெற்று (வெள்ளிப் பதக்கம்) முல்லைத்தீவுக்கும் வட மாகாணத்துக்கும் இவர் பெருமை சேர்த்திருந்தார். இந் நிலையிலேயே அவர் சர்வதேச தரத்திலான போட்டிகளில் பங்குபெற்றுவதற்காக 280,000 ரூபா பெறுமதியான ரெசிங் சைக்கிலை அன்பளிப்பு செய்துள்ளார். இலங்கை வங்கியின் முள்ளியவளை ஊழியர் ஊடாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாங்குளம் குறூப் நிருபர்

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை