ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில், பொதுமக்கள் வரிசைக் கிரமமாகவும், ஒரு சிலர் அதனை மீறியும் செயற்படுவதை காணக்கூடியதாக இருந்தது.
தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று (30) ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது, மத்திய மருந்தகம் மற்றும் தனியார் மருந்தகங்களில் பொதுமக்கள் வரிசை கிரமமாக நின்று மருந்துகளை கொள்வனவு செய்தனர்.
இதேவேளை, சமுர்த்தி வங்கியில் ஒருவரை ஒருவர் முந்தி அடித்துக்கொண்டு நீண்ட நேரமாக காத்திருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
(முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - எம் எஸ் அப்துல் ஹலீம்)
Mon, 03/30/2020 - 14:41
from tkn