தென்னாபிரிக்காவில் சிகரெட் விற்பனையை இடைநிறுத்த தீர்மானம்

தென்னாபிரிக்காவில் சிகரெட் விற்பனையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
 
உலக சுகாதார ஸ்தாபமானது கொரோனா வைரஸினால் ஏற்பட்டு வரும் மரணங்களுக்கும் புகையிலை நுகர்வுக்கும் தொடர்பு இருப்பதாக எச்சரித்துள்ளதை தொடர்ந்து தென்னாபிரிக்க அரசாங்கம் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 
 
இது தொடர்பில் தென்னாபிரிக்காவில் வெளியாகும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றுக் காரணமாக 927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 03 வாரகாலத்திற்கு அங்குள்ள நடவடிக்கைகளை முடக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.   
 
Fri, 03/27/2020 - 15:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை