அரிய வகை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் கொலை

வட கிழக்கு கென்யாவில் மிக அரிதான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் இரண்டு வெட்டைக்காரர்களால் கொல்லப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பெண் மற்றும் அதன் குட்டி கொல்லப்பட்ட நிலையில் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாவது வெள்ளை ஒட்டகச்சிவிங்கி ஒன்று உயிரிருடன் உள்ளது. இது மாத்திரமே தற்போது உலகில் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு அந்த ஒட்டகச்சிவிங்கிகளை வனவிலங்கு புகைப்படக்காரர் ஒருவர் புகைப்படம் எடுத்ததால் அது பற்றிய தகவல் உலகெங்கும் பரவியது.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை