சரத் வீரசேகர கொழும்பில் போட்டி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்காக முன்னெடுக்கும் செயற்திட்டங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக, இம்முறை பொதுத் தேர்தலில் தாம் கொழும்பு மாவட்டத்தில்போட்டியிடப் போவதாக ரியல்அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தாம் அங்கு போட்டியிட தீர்மானித்திருந்ததாகவும், எனினும் அதனைவிட அதிகமான பிரச்சினைகள் கொழும்பு மாவட்ட மக்களுக்கு உள்ளதை உணர்ந்து கொழும்பு மாவட்டத்திலேயே தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாகவும்அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்திலேயே அதிக பிரச்சினை உள்ளதாக நான் நினைத்தேன். எனினும் அதனைவிட அதிக பிரச்சினைகள் கொழும்பு மாவட்டத்தில் உள்ளன.

எதிர்காலத்தில் பொரளை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை