அமைச்சர் டக்ளஸ் முல்லைத்தீவு விஜயம்; மக்கள் சந்திப்புகளிலும் பங்கேற்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களிலும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டார்.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நோக்காகக் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் தேவானந்தா, முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில், வள்ளுவர்புரம், கைவேலி, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில் அமைச்சருடன் வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

மாங்குளம் குரூப் நிருபர்

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை