கொழும்பில் 9 மணி நேர திடீர் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (26) ஒரு மணி முதல் 09 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தது.
 
அவசர திருத்தப் பணிகளை முன்னிட்டே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கமைய கொழும்பின் 1,2,3,6,7,8,9,10,11,12,13 ஆகிய பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கொழும்பு 04, 14 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது
 
Thu, 03/26/2020 - 14:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை