அம்பியூலன்ஸ் வண்டியை வழிமறித்த 9 பேர் கைது

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ்,எஸ்.டி.எப் குவிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொரோனா தொற்று நோய் இருக்கலாம் என சந்தேகத்தில் ஒருவரை நேற்று கொண்டு வந்த அம்பியூலன்ஸ் வண்டியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலிருந்து பரிசோதிப்பதற்காக இவர் கொண்டுவரப்பட்டுள்ளார்.இதனையடுத்து ஆர்ப்பாட்டம் செய்த 09 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நபருக்கு கொரோனா தொற்று நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பரிசோதிப்பதற்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கொரோனா தொற்று நோய் பிரிவுக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் அனுப்பிவைக்கப்பட்டது.

இதனை கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மற்றும் வைத்தியசாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து போதனா வைத்தியசாலைக்குள் அம்பியூலன்ஸ் வண்டியை செல்லவிடாது வைத்தியசாலையின் எல்லா வெளி வாசல் கதவுகளையும் பூட்டி தடுத்தனர். இதனையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதால் பொலிசார் ஆர்ப்பாட்டகாரர்களை விரட்டியடித்து நோயாளியை பல கஷ்டங்களின் மத்தியில் வைத்தியசாலைக்குள் கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன் அம்பியூலன்ஸ் வண்டியை கொண்டு செல்ல விடாது தடுத்த 09 பேரை கைது செய்துள்ளனர். இதேவேளை அந்த பகுதியில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மட்டக்களப்பு குறூப், ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர்கள்

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை