தென்மராட்சியில் 896 ஹெக். நிலத்தை அபகரிக்க வனவளத் திணைக்களம் முயற்சி

பிரதேச மக்கள், பிரதேச சபை எதிர்ப்பு

தென்மராட்சி-−சரசாலை குருவிக்காட்டு பகுதியில் 896 ஹெக்டேயர் காட்டு பகுதி மற்றும் விவசாய நிலங்களை வனவளத் திணைக்களத்தினர் அபகரிக்க முயற்சி எடுத்திருப்பதாக சாவகச்சேரி பிரதேச சபையினர் மற்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சரசாலைப் பகுதியில் உள்ள அரச காணிகள், தனியாரின் விவசாய நிலங்கள், மயானம்,மேச்சல் தரவைகள், மீன்பிடி குளங்கள் மற்றும் மக்களுக்கான பொழுதுபோக்கு சவாரித் திடல் ஆகியவற்றை உள்ளடக்கி வனவளத் திணைக்களம் எல்லைப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.

எல்லைப்படுத்தல் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபைக்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ தெரியாமல் இரகசியமான முறையில் ஓரிரு தினங்களுக்கு முன்னராக மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விழிப்படைந்த பொதுமக்கள் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையினர் நேற்று திங்கட்கிழமை மாலை எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதுடன் தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

சரசாலை நிருபர்

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை