மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாக பிரகடனம்

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்துவதற்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரை வீடுகளில் இருந்து வேலைசெய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த அனைத்து அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இது ஏற்புடையதாகும்.

இக்காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாக கருதப்படமாட்டாது. மக்கள் சேவையை தொடர்ச்சியாக பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுய நோய்த் தடுப்புக் காப்புக்கு இடமளிப்பது இதன் நோக்கமாகும்.

மார்ச் 20 முதல் 27 வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து வேலைசெய்யும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நடைமுறையை குறித்த காலப்பகுதியிலும் தொடர்ந்தும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Thu, 03/26/2020 - 20:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை