நேற்று (30) காலை 6.00 மணி முதல் இன்று (31) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 508 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு இக்காலப்பகுதியில் 125 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 7,358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1768 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Tue, 03/31/2020 - 08:19
from tkn