24 மணி நேரத்தில் 1,167 பேர் கைது

இது வரை 5,185 பேர் கைது

நேற்று (27) காலை 6.00 மணி முதல் இன்று (28) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் 260  வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (28) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,293 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 03/27/2020 - 08:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை