22,132 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர். மாவட்டத்திலுள்ள எட்டு பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் சிறு குளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ் ஆண்டு சிறுபோக நெற்செய்கை 22,132 ஏக்கரில் மேற்கொள்ளபடுகிறது. இதில் இரணைமடுவுக்கு கீழ் மாத்திரம் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான முதற்கட்ட மானிய உரம் விநியோகம் அந்தந்த கமலநல சேவை நிலையங்களின் ஊடாக விநியோகிப்பட்டும் வருகின்றது.

கிளிநொச்சி குறூப் நிருபர்

 

Mon, 03/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை