அண்மையில் நாடு திரும்பிய 4,400 பேர் தொடர்பில் அவதானம்
கொரோனா தொற்றுக்கு உட்பட்ட நோயாளிகள் 10 பேரும் தற்போது, அங்கொடையிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல் நிலை முன்னேற்றமடைந்து வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இன்று (15) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் 15 வைத்தியசாலைகளில் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகளுடன் 133 பேர், வைத்திய கண்காணிப்பின் இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் அண்மையில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 4,400 இற்கு அதிகமானோர் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
from tkn