மத்தும பண்டாரவின் பெயரை செயற்குழு அங்கீகரிக்க வேண்டும்

ரணில் அறிவிப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய தேசிய கூட்டணியின் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் யோசனையை தாமும் வரவேற்பதாக குறிப்பிட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அதனை செயற்குழுவில் முன்வைத்து அங்கீகாரம் பெற்றுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நடைபெறவிருந்த செயற்குழுக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டிருப்பதால் அன்றைய தினம் ஐ.தே.மு.. தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முடிவை சஜித் பிரேமதாச அறிவிக்கவிருப்பதோடு, முன்னணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாராளுமன்றில் கூடிய ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க முன்மொழிய துஷார இந்துநில் வழிமொழிந்து கூட்டத்தி்ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

எம்.ஏ.எம். நிலாம்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை