நீதியை அமுல்படுத்தக்ேகாரி மரத்தின் மேல் ஏறி நபரொருவர் சத்தியாக்கிரகம்

'ஒரே நாட்டில் ஒரே நீதியை அமுல்படுத்துமாறு' கோரியும் சகல பொலிஸ் நிலையங்களிலும் இன, மத சார்பற்ற முறையில் நீதியாக நடந்துகொள்ளுமாறும் வலியுறுத்தி நபரொருவர் நேற்று முன்தினம் (04) பேருவளை கடற்கரை விளையாட்டு மைதானத்திற்கருகிலுள்ள 'கொட்டங்காய்' மரத்தின் மேல் ஏறி சத்தியாக்கிரக போராட்டமொன்றை மேற்கொண்டார்.

மேற்படி நபர் பதாகையொன்றை கையில் ஏந்தி காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மேற்படி நபர் மரத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தார்.

மேற்படி நபர் களுத்துறை காலவில பகுதியைச் சேர்ந்த காலவில பத்திரகே நந்தன எனப்படும் 49 வயதான நபர் என்பதும் தனக்கு பொலிஸ் நிலையத்தில் தகுந்த முறையில் நீதி கிடைக்க வில்லை எனக் கோரியே இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்.

களுத்துறை சுழற்சி நிருபர்

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை