கிழக்கில் சிறிதளவான மழை வீழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு

கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும்மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

Thu, 02/27/2020 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை