கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்- – ஹிலால் வித்தியலய மாணவர்கள் 7 பேர் தேசிய மட்ட சதுரங்க போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட சதுரங்க போட்டி சாய்ந்தமருது அல்- – ஹிலால் வித்தியாலயத்தில் 2020/02/22 நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அல்- ஹிலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்களே தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டியில் 10 பாடசாலையை பிரதிநிதித்துவப் படுத்தி 45 வீரர்கள் பங்கேற்றனர்.
கல்முனை மத்திய தினகரன் நிருபர்
Thu, 02/27/2020 - 06:00
from tkn