பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் சகோதரர் றிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப் பட்டார்.இவர் மீதான வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதன்போதே இவருக்குப் பிணை வழங்கப்பட்டது.பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன,இவரைப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
இதற்கமைய றிப்கான் பதியுதீன் 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையுடனும் மற்றும் 05 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப்பிணைகளுடன், விடுதலை செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரில் சென்று கையொப்பமிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மன்னார், தலைமன்னார் பிரதேசத்திலுள்ள 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி உறுதிப்பத்திரம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டல், இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
from tkn