ஆப்கானிஸ்தானில் இரு அமெ. துருப்புகள் பலி

கிழக்கு அப்கானிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அமெரிக்க இராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கான் இராணுவ சீருடை அணிந்த ஒருவர் இயந்திர துப்பாக்கி மூலம் அமெரிக்க மற்றும் ஆப்கான் படையினர் மீது சூடு நடத்தி இருப்பதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் மூலம் தெரியவருகிறது என்று அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. நன்கர்ஹார் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

2001 செப்டெம்பர் தாக்குதலுக்குப் பின் தலிபான்களை ஆட்சியில் இருந்து கவிழ்க்க அந்நாட்டில் தலையிட்ட அமெரிக்காவின் 13,000 துருப்புகள் அங்கு தொடர்ந்து நிலைகொண்டுள்ளன.

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை