தஞ்சைப் பெருங்கோயில் கும்பாபிஷேகத்திற்கு நயினை குருக்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு தஞ்சைப் பெருங்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் (திருமுழுக்குப் பெருவிழா) சாதகாச்சாரியராகக் கலந்து சிறப்பிக்க நயினை நாகபூஷணியம்மன் ஆலய நித்திய குருமணி ஆகமப் பிரவீணா சிவஸ்ரீ கைலை வாமதேவக் குருக்கள் ஆலய அந்தண சிவாச்சாரியர்களால் தமிழ்நாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். இராஜ இராஜ சோழ மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற ஆலயமாகத் திகழும் தஞ்சைப் பெருங்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று ( 05.02.2020 ) நடைபெறும்.

இவ் வேளையில் நயினை குருமணிக்கு வழங்கப்பட்ட இவ் அழைப்பானது இலங்கை வாழ் அந்தணப் பெருமக்களுக்கும் நயினை மண்ணுக்கும் இலங்கை வாழ் சைவப் பெருமக்களுக்கும் கிடைத்த வரலாற்றுப் பெருமதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை