ஒக்லாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2–0 என கைப்பற்றியது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக ஆரம்ப வீரர் கப்டில் 79 ஓட்டங்களும், மூத்த வீரர் ரொஸ் டெய்லர் 73 ஓட்டங்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் சாகல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 274 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, ஆரம்பம் முதலே ஓட்டங்களை குவிக்க திணறியதுடன், விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதனால் அந்த அணி 48.3 ஓவர்களில் 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மத்திய வரிசையில் ஷ்ரேயஸ் ஐயர் (52) மற்றும் ஜடேஜா (55) அரைச்சதம் பெற்றனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரில் நியூசிலாந்து அணி முழுமையாக தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுப்பதாக இந்த வெற்றி அமைந்தது.
from tkn