அனைவரது ஆன்மிகத்தை ஒளிபெறச் செய்யட்டும்

உலகெங்கும் வாழும் சைவ சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின விரத நிகழ்வில் இலங்கைவாழ் சைவ மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் நாளையொட்டி ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

சைவ சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விரதம் அனுஷ்டிக்கும் விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமயக் கிரியைகளின் மூலம் துர்க்குணங்களிலிருந்து விலகி உளத்தூய்மையை பெற்றுக்கொள்ள முடியுமென்பது  சைவர்களின் நம்பிக்கையாகும். பல்வேறு சிக்கல்கள், முரண்பாடுகளுக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்லும் இன்றைய உலகில், மனிதனுக்கு உள அமைதியை தருவது சமயமாகும்.

 

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை