இவ்வாரம் அரியாலை சரஸ்வதி உள்ளக விளையாட்டரங்கில்

யாழ். மாவட்டத்தில் பெட்மின்டன் சுற்றுப்போட்டி:

East Eagle Smashers (UK) நிறுவனம் மற்றும் MSR நிறுவனத்தினர் யாழ் மாவட்ட பெட்மின்டன் மன்றத்துடன் இணைந்து மூன்றாவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள யாழ் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கான பெட்மின்டன் சுற்றுப் போட்டி 2020 எதிர்வரும் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக விளையாட்டரங்கில் இந்தப் போட்டிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 16 ஆம் திகதி பரிசளிப்பு விழா நடைபெறும். யாழ்ப்பாண மாநகர முதல்வர் ஆர்னோல்ட் இமானுவேல் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். East Eagle Smashers (UK) நிறுவனத்தின தலைவர் முரளி கருணாநிதி, இலங்கை பெட்மின்டன் கழகத்தின் அதிகாரி சின்னப்பதாஸ், முகாமையாளர் சுகுமார், சிரேஷ்ட எழுத்தாளரும் சிவில் சேவை அதிகாரியுமான முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் தே . செந்தில்வேலவர் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கின்றனர்.

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை