இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதால், யாழ்.மாவட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்களைச் சாராத இளைஞர்கள் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிற்கும் உட்பட்ட 18 வயது முதல் 29 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் இந்த வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்றும், இன்றும் இந்த வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளன. இம்முறை, இளைஞர் கழகங்களை சாராத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆர்வமாக வந்து வேட்புமனுதாக்கல் செய்தனர்.

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்புமனுத் தாக்கலில், யாழ். மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் 20 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். எதிர்வரும் 22 ஆம் திகதி அனைத்துப் பிரதேச செயலகங்களிலும், காலை முதல் மாலை 4 மணிவரை வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டு, முதன் முதலாக ஒன்லைன் மூலம் இந்த வாக்களிப்புக்கள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை